Monday, January 5, 2026

திருவழிப்பாட்டு பாடல்கள் | திருப்பலிப் பாடல்கள்

காணிக்கைப் பாடல்

Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Barbara Stefy

Listen (Song):- https://youtu.be/NKp1EXTZLWw 

Karoke:- https://youtu.be/mWO2hQrtMnM


எந்தன் உள்ளம் உம்மில் இணைய
எம்மை உமக்கு  தந்தேன்

படைப்பின் பொருளை பலியில் பரிசாய் 

தந்தேன் என் இறைவா -2


உள்ளத்தை தந்தேன் 

(உம்மில் வந்தேன்-2) 

உள்ளத்தை  தந்தேன் -2

1
உள்ளதை தந்தேன் உள்ளத்தை கேட்டாய்

மலரை தந்தேன் மனதை கேட்டாய் 

பலியில் தந்தேன் பகிர்வை கேட்டாய்

எல்லாம் தந்தேன் என்னை கேட்டாய் -2

                                      உள்ளத்தை…

2
உறவில் மலர உலகை படைத்தாய்

மீட்பை அளிக்க மரணம்  ஏற்றாய் 

உன்னெழில் பாதை எம்மில் இணைய 

வெண்ணிற அப்பமாய் எம்மில் வந்தாய் -2

                                      உள்ளத்தை…



தியானப் பாடல்


Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Krithika Babu


Listen (Song):- https://youtu.be/MTIC8kNAltI 











இறைவா என்னைத் தேர்ந்தாய்  

கருவில் என்னைச் சுமந்தாய் - எந்தன் 

பெயரைச் சொல்லி அழைத்தாய் 

கண்ணின் மணிபோல் காத்தாய் - 2  

 

உனது பயணம் தொடர 

சம்மதமே இறைவா 

உனது அன்புக் கரத்தில்  

வாழ்வு வளரும் நிறைவாய்-2

உறவிலே உருகிட  

உறைந்திட்டேன் ஒளிர்ந்திட்டேன் -இறைவா... 


                            1

சின்ன சிறிய இதயம் திறந்து 

உந்தன் உறவில் இணையவே 

எந்தன் உள்ளம் ஏங்குதே 

கூட்டை தேடும் பறவை போல 

உந்தன் சந்நிதி சேரவே 

எந்தன் மனதில் தாகமே -2

மண்ணில் மடிந்து உம்மில் மலர 

இந்த விதையும் விரும்புதே -2   -உனது பயணம்.... 


                             2 

உள்ளம் திறந்து உன்முன் அமர்ந்து 

உன்னுடன் என்றும் பேசவே 

எந்தன் உணர்வுகள் உருகுதே 

கண்ணீர் சிந்தும் கண்களில் உந்தன்

அழைப்பின் குரலைக் கேட்கவே

எந்தன் செவிகள் திறந்ததே -2

உந்தன் நெருப்பில் உருகி ஒளிர 

இந்த மெழுகும் ஏங்குதே      -உனது பயணம்...

வருகைப் பாடல்

 
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Fr. T. Ansel Antony CMF 


Listen (Song):- https://youtu.be/W7BBAc4lEw4













இறைவனின் வார்த்தையிலே

இயேசுவின் வாழ்விலே

கலந்திட வாருமே

கோதுமை அப்பத்திலே

திராட்சை இரசத்திலே

பகிர்ந்திட வாருமே – 2


இதயங்கள் மலர

இறையருள் வளர

இறையுறவில் இணைந்திடுவோம்

நிறைவாழ்வில் நிலைத்திடுவோம்


                  1

ஆயனின் மேய்ச்சலில் 

பிழைதனை தயைசெய்து

இறைச்சிறு மந்தையில் 

ஒன்றித்து வாழ்ந்திட -2


நீதியில் திளைத்திட 

ஒளியினில் நடந்திட

அன்பினில் மலர்ந்திட

அருள் ஒளி பெற்றிட

பலியினில் இணைந்திட

இறைமகன் அழைக்கின்றார்

                                           -இதயங்கள்…

                    2

அருள்தரும் இறைவாக்கு 

தினம் தினம் நிறைவாழ்வு

அன்புத் தரும் நல்லுறவு

குறைத்தீர்க்கும் மறைவாக்கு  – 2


மீட்பளிக்கும் மகிழ்வு 

உயிரளிக்கும் அன்பு

வாழ்வளிக்கும் உறவு

குணமளிக்கும் மருந்து

பலியினில் இணைந்திட

இறைமகன் அழைக்கின்றார்

                                     -இதயங்கள்…


சிலுவைப்பாதை பாடல்

Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF


Singer:- S.P. Sundar 


Listen (Song):- https://youtu.be/PyJZYeIIOok













கல்வாரி காயங்கள் காவியமாய்- எம் 

கறைகளை கரைத்திட கையளித்தீர்-2


 சாவின் இறுதிக்கு தீர்ப்பளித்து

 மன்னன் பிலாத்து சான்றுரைத்தான்  -2


விரும்பி ஏற்கும் சிலுவையோ 

அன்பின் பகிர்வின் அடையாளம் -2


பாரம் தாங்கா    சிலுவைதனை

பாதை தன்னில் சாய்த்தாரே -2


சோர்ந்து போகும் வேளையிலே

ஆற்றல் தருவாள் அன்னையவள்  -2


உறவின் கரங்கள் ஆயிரம்

 உதவும் கரமாய் சீமோனோ-2


 சிதைந்த முகத்தின் உருவத்தினை 

துணியில் பதித்தது வீரமகள் -2


சிந்தை சிதைந்த இயேசுவோ 

வெந்த தரையில் சாய்ந்தாரே-2


விழியில் ஈரம் உலர்ந்திடவே

 இதய ஈரம் நிலைத்திடவே -2


தேடி அலைந்து ஓடிய

 கால்கள் இடறி விழுந்ததோ -2


பசியும் உறவும் உடையுமே 

என்றும் இழக்க நேர்வதில்லை -2


மீட்பின் சின்னமாய் சிலுவையிலே 

ஆணிகள் கரங்களில் பாய்ந்ததுவே  -2


ஆவி பிரியும் முன்னரே 

கூவி அழைத்து ஒப்படைத்தார் -2


விடியலின் சின்னமாய் மாண்டாரே

மரியின் மடியில் மலர்ந்தாரே -2


 மீண்டும் உயிருடன் எழுந்திடவே

புதைந்த கல்லறை மூடியதோ -2



Friday, August 30, 2024

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு - (ஆண்டு- B)- 01-09-2023- ஞாயிற்றுக்கிழமை

                                                       

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை

(01-09-2024, ஞாயிறு)

வழங்குபவர் 
Fr. அ. குழந்தை யேசு ராஜன் CMF
தாம்பரம், சென்னை

முதல் வாசகம்: இணைச்சட்டம் 4: 1-2, 6-8

இரண்டாம் வாசகம்:  யாக்கோபு 1: 17-18, 21b-22, 27

நற்செய்தி: மாற்கு 7: 1-8, 14-15, 21-23


கிறிஸ்தவ வாழ்வு (வார்த்தையோடு & தூய வாழ்வு)

                வட ஆப்பிரிக்காவில் கிபி 354 இல் புனித அகஸ்டின் பிறந்தார். இவர் ஒரு சிறந்த தத்துவஞானி மற்றும் இறையியலாளர் ஆவார். இருப்பினும், இவரது ஆரம்ப ஆண்டுகளில், இவர் உலக இன்பங்கள் மற்றும் அறிவுசார் பெருமைகளில் ஈடுபட்டு இறைவனிடமிருந்து விலகி வாழ்ந்தார். இவருக்காக இவரது தாய் புனித மோனிகா தொடர்ந்து ஜெபித்து வந்தார். ஒரு நாள், தோட்டத்தில் ஒரு குழந்தையின் குரல் "எடுத்து வாசி" என்று அகஸ்டினுக்கு கேட்டது. உடனே அருகிலிருந்த திருவிவிலியத்தை எடுத்து உரோமையர் 13:13-14 திறந்து படித்தார்: “பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.” என்னும் இந்த வார்த்தைகள் புனித அகஸ்டினாரின் இதயத்தைத் துளைத்தன. உண்மையான வாழ்வு உலக ஆசைகளில் இல்லை, மாறாக கடவுளுடைய வார்த்தையின்படி வாழ்வதில்தான் உள்ளது என்பதை அவர் உணர்ந்தார். உள்ளத்தூய்மையை பெற்றார். புனித அகஸ்டினாரின் வாழ்க்கை நாம் வழிதவறினாலும், இறைவார்த்தையால் தூய வாழ்வு பெறுவோம் என்னும் நம்பிக்கையை நம் கிறிஸ்தவ வாழ்வுக்கு தருகிறதுபொதுக்காலத்தின் 22வது ஞாயிற்றுக்கிழமை இறைவார்த்தை வழிபாடு நம் கிறிஸ்தவ வாழ்வைப் பற்றி சிந்திக்க அழைப்பு தருகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் வார்த்தையோடு வாழ்வு மற்றும் தூய வாழ்வு என்னும் இரண்டு வழிகளை நமக்கு சுட்டிக்காட்டி சிந்திக்க அழைக்கிறது.

1. வார்த்தையோடு வாழ்வு
                இன்றைய இரண்டாம் வாசகம் படைப்புகளில் உண்மையை எடுத்துரைக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க இறைவன் விரும்பினார் என்பதை எடுத்துக் கூறுகிறது. பணிவோடு வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அவ்வார்த்தையின் படி நடங்கள் என்னும் இரண்டு மாபெரும் கட்டளைகளை தந்து இறைவார்த்தையில் நம் வாழ்வு அமைய யாக்கோபு திருமுகம் அழைக்கிறது. இன்றைய  முதல் வாசகத்தில், மோசே இஸ்ராயேல் மக்களிடம் பேசுகிறார், கடவுளின் வார்த்தைகளாம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். கடவுளுடைய சட்டத்தில் சேர்க்கவோ குறைக்கவோ வேண்டாம், ஆனால் அதை உண்மையாகக் கடைப்பிடிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். மற்ற நாடுகள் இஸ்ராயேல் மக்கள் கடவுளின் வார்த்தையை கடைப்பிடித்து, ஞானமும் அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பர் என்பதை அங்கீகரிப்பர் என்கிறார். இன்றைக்கு நம் வாழ்க்கையில் இறைவார்த்தையின்படி வாழ்வதற்கு அழைப்பு பெறுகின்றோம். இஸ்ராயேல் மக்கள் இறைவார்த்தைக்கு செவிகொடுத்து பிற நாடுகளுக்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்டது போல், நாமும் இறைவனுடைய வார்த்தையின்படி வாழ்வதன் மூலம் அவருடைய அன்புக்கும் நீதிக்கும் சாட்சிகளாக இருக்க  அழைக்கப்பட்டுள்ளோம். இதைத்தான் "உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்." என்கிறார் இறைமகன் இயேசு. (மத் 5:16) நல்ல சமாரியன் இயேசுவின் வார்த்தையின்படி செயல்படுபவராக இருக்கிறார். (லூக்கா 10:25-37) சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (யோவான் 6:68) என்று கூறி வார்த்தையில் தான் வாழ்வு என்கிறார். இன்றைக்கு நாமும் ஆண்டவருடைய வார்த்தையை கேட்பவர்களாக மட்டுமல்லாது அதை அன்றாட வாழ்வில் வாழ்ந்து காட்டுகின்ற கிறிஸ்தவர்களாக வாழ முயற்சிப்போம். நாம் இறைவார்த்தையை நம்முடைய உள்ளத்தில் பணிவோடு ஏற்றுக் கொள்கின்றோமா? அந்த வார்த்தையை வாழ்ந்து காட்டுகின்றோமா? என சிந்தித்துப் பார்ப்போம். இறைவார்த்தையை வாசிப்போம், தியானிப்போம் மற்றும் வாழ்வோம்.

2. தூய வாழ்வு
                    இன்றைய இரண்டாம் வாசகம் தூய வாழ்வு வாழ நமக்கு அழைப்பு கொடுத்து, எது உண்மையான தூய வாழ்வு என்பதையும் எடுத்துக் கூறுகிறது. இது துன்புறும் அனாதைகள் மற்றும் கைம்பெண்களை கவனித்தல்தான் தூய வாழ்வு என்பதையும், இன்னும் உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ளுதல்தான் தூய வாழ்வு என்பதையும் எடுத்துக் கூறுகிறது. தூய வாழ்வின் இந்த இரண்டு நிலைகளையும் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றுகின்றோமா? இன்றைய நற்செய்தி உள்ளத்தூய்மையை பற்றி எடுத்துக் கூறுகிறது. சீடர்கள் கை கழுவும் சடங்கைப் பின்பற்றாததற்காக பரிசேயர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, எசாயா 29:13 மேற்கோள் காட்டி: "வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது." என்கிறார்மேலும் வெளியிலிருந்து ஒருவருக்குள் செல்வது அல்ல, உள்ளிருந்து வெளிவருவதுதான் அவர்களைத் தீட்டுப்படுத்துகிறது என இயேசு எடுத்துரைத்து பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை மட்டும் தூய வாழ்வுக்கு அழைப்பு கொடுக்கவில்லை, மாறாக நம் ஒவ்வொருவரையும் தூய வாழ்வு வாழ அழைக்கிறார்இன்றைக்கு நமது எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் செயல்கள் இறைச்சித்தத்துடன் இணைந்திருக்கும் ஆழமான மனமாற்றத்திற்கு அதாவது தூய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கிறார். மலைப்பொழிவில் இயேசு கூறியது போல், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்." (மத்தேயு 5:8). எனவே நம் வாழ்வு பாவமற்ற, சுயநலமற்ற வாழ்வாம் தூய வாழ்வாக அமையட்டும்

            கொடைகளும் வரமும் விண்ணக தந்தை தரும் வாழ்வு என்னும் யாக்கோபின் வார்த்தைகளுக்கு ஏற்ப வார்த்தையோடும், தூய உள்ளத்தோடும் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து விண்ணகத்தந்தையின் கொடைகளையும் வரங்களையும் பெறுவோம்.